“பூமி தாயின் ரத்தத்தை குடிக்கிறார்கள்” - நீதிமன்றம் அதிருப்தி

தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள், பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தத்தை குடிக்கின்றார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் புரவிபாளையத்தில் விதிகளை மீறி குவாரி நடத்தியதாக அதன் உரிமையாளர் கே.டி.செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கபட்டது. இந்த நிலையில், “குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை என்ன பங்கு உள்ளது? என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags :