மதுரையில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க அமைச்சர் பொன்முடி முடிவு.

by Editor / 01-11-2023 10:42:11pm
மதுரையில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க அமைச்சர் பொன்முடி முடிவு.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: நாளை நடைபெற உள்ள மதுரை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாகவும்,சுதந்திரப் போராட்ட வீரர் சங்கரையாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் மறுத்திருக்கிறார்,இதைவிட மோசமான ஆளுநர் இருந்தது இல்லை. சங்கரையா பற்றி தெரியவில்லை என்றால் கேட்டு அறிந்திருக்க வேண்டும்,நாளை மதுரையில் நடக்க உள்ள பட்டமளிப்பு விழாவில் நான் கலந்துகொள்ளப் போவதில்லை. அதை புறக்கணிக்க முடிவெடுத்துள்ளேன் என - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை மத்தியில் தெரிவித்துள்ளார்.
 

 

Tags : மதுரையில் நாளை நடக்கும் பட்டமளிப்பு விழாவை புறக்கணிக்க அமைச்சர் பொன்முடி முடிவு.

Share via