டெங்கு பாதிப்பால் 4 பேர் பலி

by Staff / 02-11-2023 04:33:33pm
டெங்கு பாதிப்பால் 4 பேர் பலி

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வருகிறது. நாள்தோறும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், டெங்கு உள்ளிட்ட காய்ச்சலும் பரவி வருவதால் சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது. இதனிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 2 வாரத்தில் 4 பேர் பலியானதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் டெங்கு காய்ச்சலால் 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 8 பேர் பலியானதாகவும் கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லுமாறும், சுயமாக மருத்துவம் செய்து கொள்ளக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via