ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை

by Staff / 02-11-2023 05:04:42pm
ரயிலில் பட்டாசு எடுத்துச் சென்றால் 3 ஆண்டு சிறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயிலில் பட்டாசு உள்ளிட்ட வெடி பொருட்கள் எடுத்துச் சென்றால் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர். சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

 

Tags :

Share via