மருத்துவமனை அருகே சாக்கடையில் 8 மாத குழந்தையின் உடல் மீட்பு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அருகே உள்ள சுரங்க பாதை சாக்கடையில் இன்று காலை இறந்த நிலையில் எட்டுமாத பெண் குழந்தையின் உடல் கிடப்பதாக அதனை பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags :