கரூர் மாநகராட்சி திமுக மேயர் கவிதா கம்பி எண்ணுவது உறுதி - அண்ணாமலை.

by Editor / 04-11-2023 08:31:44pm
கரூர் மாநகராட்சி திமுக மேயர் கவிதா கம்பி எண்ணுவது உறுதி - அண்ணாமலை.

கரூர் மாநகராட்சி திமுக மேயர் கவிதா 3 மாதத்தில் சிறைக்கு செல்வது உறுதி என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'மேயர் கவிதா தான் ரவுடி கும்பல்களுக்கு தலைவி. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் இருந்து அவர் ஒருபோதும் தப்பிக்க முடியாது. ரொம்ப ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் உள்ளே இருக்கிறார்கள். செந்தில் பாலாஜியே உள்ளேதான் இருக்கிறார். கவிதா என்ன பெரிய ஆளா?' என கேள்வி எழுப்பினார்.
 

 

Tags : கரூர் மாநகராட்சி திமுக மேயர் கவிதா கம்பி எண்ணுவது உறுதி - அண்ணாமலை.

Share via