19 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை
சேலத்தில் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பதாக கூறி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நீட் தேர்வு மையத்தில் படித்து வருகிறார். இந்நிலையில், பேருந்து நிறுத்தத்தில் அறிமுகமான சக்திதாசன் (39) என்பவர் நீட் தேர்வுக்கு உதவி செய்வதாக கூறி விடுதியில் அறையெடுத்து மாணவியை அங்கு வரவழைத்துள்ளார். அங்கு திடீரென மாணவியிடம் கத்தியை காண்பித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதற்கு இளம்பெண் எதிர்ப்பு தெரிவித்த அப்பெண் கத்தியை பிடுங்கி சக்திதாசனை சரமாரியாக குத்தியுள்ளார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :