65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த அஸ்ஸாம் மாநில கொள்ளையன் இருவரை போலீசார் கைது செய்தனர்

by Admin / 20-12-2023 11:14:46am
 65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த அஸ்ஸாம் மாநில கொள்ளையன் இருவரை போலீசார் கைது செய்தனர்

கோவில்பட்டி கணேஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (65) இவரது மகன் கார்த்திக் (30). இவர் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த நவம்பர் 27 ஆம் தேதி காலையில் சந்திர மோகன் தனது மனைவியுடன் தேனி மாவட்டம் பண்ணைப்புரத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில் டிசம்பர் 1ஆம் தேதியன்று அவரது  வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வங்கி மேலாளர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு வீட்டில் கொள்ளை சம்பவம் நடைபெற்று இருப்பதை  தெரிவித்தனர். இதையடுத்து தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் இருந்து புறப்பட்டு வந்த வங்கி மேலாளர் கார்த்திக் மற்றும் அவரது  பெற்றோர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் வெளிப்புற இரும்பு கதவு மற்றும் உள்புற மரக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் லாக்கரில் வைத்திருந்த 65 சவரன் தங்க நகைகள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சந்திரமோகன் அளித்த புகாரின் பேரில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் கைரேகைகள்  மற்றும் அப்பகுதியில் பதிவாகியிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு  கொள்ளையர்களை தனிப்படை அமைத்து தேடினர்.

போலீசார் விசாரணையில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து 

முருகேசனை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் குற்ற வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை மத்திய சிறையில் இருந்த போது அங்கு வேறு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த கோணேஷ் முன்டா என்பவருடன்  பழக்கம் ஏற்பட்டதாகவும் சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு அந்த நட்பை தொடர்ந்த நிலையில் இருவரும் கூட்டாக சேர்ந்து கோவில்பட்டியில் வங்கி மேலாளர் வீட்டில் கொள்ளையடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அஸ்ஸாம் மாநிலம் விரைந்த கோவில்பட்டி தனிப்படை போலீசார் பிஸ்வநாத் பகுதியில் வைத்து கோனேஷ் முன்டாவை சுற்றி வளைத்து கைது செய்து கோவில்பட்டிக்கு அழைத்து வந்தனர். பின்னர் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் செவ்வாய்க்கிழமை ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

 65 சவரன் தங்க நகைகள் கொள்ளையடித்த அஸ்ஸாம் மாநில கொள்ளையன் இருவரை போலீசார் கைது செய்தனர்
 

Tags :

Share via