கோவை கல்லூரியில் ராகிங்: 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

by Staff / 08-11-2023 04:51:57pm
கோவை கல்லூரியில் ராகிங்: 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

கோவை பிஎஸ்ஜி கல்லூரியில் ஜுனியர் மாணவர்களிடம் ராகிங்கில் ஈடுபட்டு கைதான 7 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட 7 பேரும், கல்லூரியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கைதான மாணவர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மது குடிப்பதற்காக பணம் கேட்டு 2ஆம் ஆண்டு ஜுனியர் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் 7 பேரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தனர்.
 

 

Tags :

Share via