கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் பலி
ஹரியானாவில் கள்ளச்சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், யமுனா நகர் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து இளைஞர் ஒருவர் இறந்ததாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று விசாரித்த எங்களுக்கு அதிர்ச்சி விஷயம் தெரியவந்தது. அதாவது, அந்த இளைஞருடன் சேர்ந்து குடித்த அதே பகுதியை சேர்ந்த மேலும் 5 பேர் உயிரிழந்தது தெரியவந்தது என தெரிவித்தனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags :