பட்டாசு சப்தத்தால் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.

by Editor / 13-11-2023 10:02:01am
பட்டாசு சப்தத்தால் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.

 நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு சத்தத்திற்கு பயந்து வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை வெளியேறி உள்ளது.குன்னூரில் தீபாவளி பண்டிகையை ஒட்டி மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடிய நிலையில், கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை பட்டாசு சத்தத்திற்கு அஞ்சி வீட்டிற்குள் தஞ்சம் அடைந்தது. இதைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அதிகாரிகள் சிசிடிவி கேமராக்களை பொருத்தி சிறுத்தையை கவனித்து வந்த நிலையில் 26 மணி நேரத்துக்கு பின் சிறுத்தை வீட்டிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : பட்டாசு சப்தத்தால் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை.

Share via