பல்வீந்தர் சிங் மீது நடவடிக்கை எடுக்க அரசு அனுமதி
விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஐபிஎஸ் அதிகாரி பல்வீந்தர் சிங் மீது குற்ற நடவடிக்கை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அமுதா ஐஏஎஸ் விசாரணை அறிக்கையை வழங்கக்கோரியும், அம்பாசமுத்திரம் காவல்நிலைய சிசிடிவி காட்சிகளை பாதுகாக்க கோரியும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதில், அமுதா ஐஏஎஸ் அறிக்கையை வழங்க கால அவகாசம் தேவைப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை அம்பாசமுத்திரத்தில் காவல் துறையின் விசாரணைக்கு அழைத்து செல்லப்படுவோரின் பற்களை பிடுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
Tags :