ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

by Staff / 16-11-2023 02:38:20pm
ஓபிஎஸ் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

அதிமுக கொடி, பெயர், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வழக்கை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஒத்திவைத்துள்ளது. அதிமுக கட்சி, சின்னம் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் அதிமுக கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via