மதுரையில் உரிய பராமரிப்பு இன்றி வளர்த்து வந்த யானை பறிமுதல் செய்தது வனத்துறை

by Staff / 27-05-2022 01:08:06pm
மதுரையில் உரிய பராமரிப்பு இன்றி வளர்த்து வந்த யானை பறிமுதல் செய்தது வனத்துறை

மதுரையில்  முறையாக அனுமதி பெறாமல் உரிய பராமரிப்பின்றி தனிநபர் வளர்த்து வந்த யானையை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.கமலா நகரை  சேர்ந்த மாலா என்பவர் தனது வளர்ப்பு பெண் யானையை பிச்சை எடுக்க பயன்படுத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து.அவர் யானையை வளர்க்க   வனத்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டதையடுத்து  மாவட்ட நீதிமன்றத்தில் அவர் யானை வாங்கியது தொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. யானைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கும் சூழலில் நேற்று மாலைமாலா வீட்டிற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் யானைக்கு உரிய பராமரிப்பு இல்லாததாக  கூறியானையை  பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via