7 கோடி வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை

by Staff / 03-05-2024 01:46:47pm
7 கோடி வாட்ஸ்-அப் கணக்குகளுக்கு தடை

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரை விதிமுறைகளை மீறியதாக 7 கோடி வாட்ஸ்-அப் கணக்குகள் தடை செய்யப்பட்டதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மோசடி மற்றும் சட்டவிரோத டெலிமார்க்கெட்டிங் குறித்த புகார்கள் வந்த வண்ணம் இருப்பதால் இது குறித்த விசாரணையில் ஈடுபட்டு வருவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக ‘Account Restriction’ என்ற புதிய அம்சத்தையும் வாட்ஸ்-அப் கொண்டுவந்துள்ளது.

 

Tags :

Share via