கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் நிலைதடுமாறி பைக்குடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

by Staff / 27-05-2022 12:56:47pm
கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் நிலைதடுமாறி பைக்குடன் விழுந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு

நாகை மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆற்றின் தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி குழியில் பைக்குடன் நிலை தடுமாறி விழுந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரெஞ்சுமுலை  கிராமத்தைச் சேர்ந்த ஆகாஷ் நேற்றிரவு அளத்தம்பட்டி  ஆலங்குடி வரை செல்லும் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த.அப்போது  புத்தூர் பகுதியில் அரிச்சந்திரா ஆற்றங்கரை தடுப்பு சுவர் கட்டுமான பணிக்கு தோண்டப்பட்ட 20 அடி பள்ளத்தில் பைக்குடன் தலைகீழாக விழுந்துள்ளார். இதில் காயமடைந்த ஆகாஷ் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பள்ளம் தோண்டிய  இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை எனவும் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் விபத்து நேர்ந்ததாக கூறப்படும் நிலையில் அலட்சியமாக செயல்பட்டதாக கட்டுமான பணி ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via