வெள்ளத்தில் சிக்கிய உதவி ஆட்சியர் காரை மீட்க உதவிய பொதுமக்கள்
ராஜஸ்தான் மாநில சுரங்கப்பாதை ஒன்றில் தேங்கியிருந்த மழை வெள்ளத்தில் சிக்கிய உதவி ஆட்சியரின் காரை பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது .ஸ்ரீ கங்காநகர் பகுதியில் பெய்த மழை காரணமாக அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது இதனை அறியாமல் அவசர உதவி ஆட்சியரின் கார் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது இதனை அறிந்த பொதுமக்கள் விரைந்து சென்று அந்த காரை சுரங்கப் பாதையில் இருந்து பத்திரமாக மீட்டனர்.
Tags :