நாங்குநேரி நீதிமன்றம் அருகே வெடி குண்டு வீச்சு : பிளஸ் 2 மாணவன் கைது

by Staff / 22-11-2023 02:04:38pm
நாங்குநேரி நீதிமன்றம் அருகே வெடி குண்டு வீச்சு : பிளஸ் 2 மாணவன் கைது

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பெருமாள் சந்நிதி தெருவை சேர்ந்தவர் வானமாமலை (50). நாங்குநேரி நீதிமன்றம் மற்றும் தாலுகா அலுவலகம் அருகே ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார். தனியார் தொலைக்காட்சியின் நிருபராகவும் உள்ளார். இந்நிலையில் நேற்று காலை 9 மணியளவில் கடையில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் வெடி குண்டு வீசியுள்ளனர். இதில், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே சம்பவம் தொடர்பாக நாங்குநேரி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவரை போலீஸார் கைது செய்து விசாரிக்கின்றனர். நாங்குநேரியில் கடந்த சில மாதங்களுக்கு முன் பிளஸ் 2 மாணவரும், அவரது சகோதரியும் வீடு புகுந்து அரிவாளால் வெட்டப்பட்டனர். இது தொடர்பான செய்தியை இந்த நிரூபர் வெளியிட்டது தொடர்பான விரோதத்தால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதாக போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

Tags :

Share via