ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு ஜாமீன் - மதுரை ஐகோர்ட்

by Staff / 22-11-2023 02:29:14pm
ரவுடி வரிச்சூர் செல்வத்துக்கு ஜாமீன் - மதுரை ஐகோர்ட்

விருதுநகர் மாவட்டம் சேர்ந்தவர் செந்தில் குமார். இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி ஆவார். குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜ், முனியசாமி ஆகியோர் கொல்லப்பட்ட வழக்கில் செந்தில்குமாரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால் சென்னையில் தலைமறைவாக இருந்தார்.
இந்தநிலையில், அங்கு இருந்த செந்தில்குமார் காணவில்லை என்று அவரது மனைவி போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார் விசாரணை செய்ததில், வரிச்சூர் செல்வத்தின் கூட்டாளிகள், கொலை செய்து தாமிரபரணி ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் வரிச்சூர் செல்வத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.இதனைதொடர்ந்து பல மாதங்களாக சிறையில் இருக்கும் செல்வம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிவஞானம், வரிச்சூர் செல்வத்துக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
 

 

Tags :

Share via