கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர், அவரது உதவியாளர் கைது
கள்ளக்குறிச்சி அருகே சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த போலி மருத்துவர் மற்றும் அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டனர். கருவில் உள்ளது ஆணா பெண்ணா என கண்டறியும் ஸ்கேன் கருவி, மருந்து மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவரை மாநில அளவிலான பாலின தேர்வை தடை செய்தல் சட்ட கண்காணிப்பு குழு டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில் சுகாதாரத்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். இவர் இதே வழக்கில் மூன்று முறை கைதான நிலையில், தற்போது நான்காவது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார். கருக்கலைப்பு செய்யும் நேரம் உட்பட 24 மணி நேரமும் போலி மருத்துவர் முருகேசன் மது போதையில் இருப்பதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :