பொது நிவாரண நிதி: ரூ.3 கோடி வழங்கிய டிவிஎஸ்

by Staff / 08-12-2023 01:23:40pm
பொது நிவாரண நிதி: ரூ.3 கோடி வழங்கிய டிவிஎஸ்

'மிக்ஜாம்' புயல் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ.3 கோடி வழங்கியுள்ளது. இதற்கான காசோலையை டிவிஎஸ் குழுமத்தின் தலைவர் வேணு சீனிவாசன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். முன்னதாக டிவிஎஸ் நிறுவனம் டிசம்பர் 18 ஆம் தேதிக்குள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு வேலைக் கூலி இல்லாமல் பழுது பார்த்து தரப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via