வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது எப்படியாவது காப்பாத்துங்க..

by Editor / 18-12-2023 10:40:37pm
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது எப்படியாவது காப்பாத்துங்க..

திருநெல்வேலி, தூத்துக்குடி பகுதிகளில் பெய்துவரும் கனமழை குறித்து இயக்குனர் மாரிசெல்வராஜ் பதிவிட்டுள்ளார். அதில், வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம் போன்ற இருபதுக்கும் மேற்பட்ட இடங்களை தொடர்புகொள்ள முடியவில்லை எப்படியாவது அவர்களை மீட்டுக்கொடுங்கள் என பதிவிட்டுள்ளார்.

 

Tags : வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது

Share via