அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்யப் படைகள் துப்பாக்கிச் சூடு 2 பேர் உயிரிழப்பு

உக்ரைன் தலைநகர்கீவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷிய படைகள் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் காட்சிகள் வெளியாகியுள்ளன.உக்ரேன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்ய படைகள் தொடர்ந்து பொது மக்களின் உயிருக்கும் உடமைகளுக்கும் சேதம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதம் கிவில் அப்பாவி பொதுமக்கள் மீது ரஷ்ய படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் கார் டீலர்ஷிப் அருகே உள்ள சாலையில் சென்று கொண்டிருந்த 2 பேர் உயிரிழந்தனர்.
Tags :