முத்து நகர் விரைவு ரயிலில் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்.

சென்னையில் இருந்து மதுரை நோக்கி வந்த முத்து நகர் விரைவு ரயிலில் திண்டுக்கல் ரயில்வே போலீசார் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில்கஞ்சா சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அதே வண்டியில் மதுரையைச் சேர்ந்த அண்ணாதுரை (56) என்பவரின் பையை சோதனை செய்துள்ளனர் அப்போது பாண்டிச்சேரியில் இருந்து 44 மது பாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் அண்ணாதுரையை கைது செய்து பின்னர் திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மேலும் திருக்குறள் விரைவு ரயில் வண்டியில் கேட்பாரற்று கடந்த பேக்கில் குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை பறிமுதல் செய்தனர்
Tags : முத்து நகர் விரைவு ரயிலில் பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல்.