ரயிலில் சிக்கியுள்ளவர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார்

by Staff / 19-12-2023 12:07:13pm
ரயிலில் சிக்கியுள்ளவர்களை அழைத்துச் செல்ல பேருந்துகள் தயார்

செந்தூர் ரயிலில் சிக்கியுள்ளவர்கள் மீட்கப்பட்ட உடன் அழைத்துச் செல்ல 13 பேருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு காரணமாக ஸ்ரீவைகுண்டத்தில் செந்தூர் விரைவு ரயிலில் பயணித்த பயணிகள் சிக்கிக்கொண்டனர். உணவு, குடிநீர் கிடைக்காமல் முதியோர், பெண்கள், குழந்தைகள் என பலரும் தவித்து வருகின்றனர். இந்நிலையில் பயணிகளை மீட்பதற்காக சென்ற ஹெலிகாப்டர் ஸ்ரீவைகுண்டம் ரயில்நிலையத்தை நெருங்கியது. ஹெலிகாப்டர் மூலம் 5 உணவு மூட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ரயிலில் உள்ளவர்கள் இன்று மாலைக்கு மீட்கப்படுவார்கள் என தெரிகிறது.

 

Tags :

Share via