மழை வெள்ளம் குறித்து அதிமுக மாஜி எம்எல்ஏ மனு

by Staff / 20-12-2023 03:17:24pm
மழை வெள்ளம் குறித்து அதிமுக மாஜி எம்எல்ஏ மனு

நெல்லையில் பெய்த கனமழையால் மாவட்டம் முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. எனவே மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் ராதாபுரம் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை இன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போதிய உதவிகளை செய்து தேவையான நிவாரணங்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

 

Tags :

Share via