இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி

by Staff / 22-12-2023 04:46:42pm
இரவில் பரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் பலி

திருப்பூரை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற மாணவர், கோவையில் உள்ள கல்லூரியில் என்ஜினியரிங் படித்து வந்தார். இவர் கோவை அருகே கண்ணம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் நண்பர்களுடன் சேர்ந்து இரவு நேரத்தில் பரோட்டா சாப்பிட்டுள்ளார். காலையில் மாணவர் ஹேமச்சந்திரன் அசைவில்லாமல் இருந்துள்ளார். இதனையடுத்து சக மாணவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via