இன்று அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.
பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். இங்கு வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12ஆம் தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இன்று முதல் ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் தொடங்குகிறது. 29ஆம் தேதி நம்பெருமாள் கைத்தல சேவை, 30ஆம் தேதி திருமங்கைமன்னன் வேடுபறி நிகழ்ச்சி, ஜன.1ஆம் தேதி தீர்த்தவாரி, 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சம் நடக்கிறது.
Tags : இன்று அதிகாலை 4 மணிக்கு பரமபதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது.