பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு. 

by Editor / 25-12-2023 04:47:10pm
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு. 

அதிமுக-வின் பொதுக்குழு கூட்டம் கடந்த வருடம் சென்னையில் உள்ள வானகரத்தில் நடந்தது. அப்போது அதிமுகவில் இரட்டை தலைமை பிரச்சனை இருந்த காரணத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டு ஓபிஎஸ் வெளியேறினார். இதனையடுத்து ஈபிஎஸ் அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். இதுகுறித்த வழக்கு தற்போது வரை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சென்னை வானகரம் பகுதியில் நாளை காலை 10:35 மணிக்கு அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. கூட்டத்தில் அதிமுகவின் அரசியல் நிலவரம் குறித்தும்,அதிமுகவில் பலமாவட்ட செயலாளர்கள் செயல்பாடுகள் குறித்தும்,வரும் பாராளுமன்றத்தேர்தல்கள் குறித்தும்,திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானால் யாரை நிறுத்துவது என்பது குறித்தும், பாராளுமன்றத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்த பின்னர் யாருடன் கூட்டணி..என்பதுகுறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

Tags : பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு. 

Share via