தூத்துக்குடி மாவட்டத்தில் 31-உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

by Editor / 25-12-2023 04:54:48pm
தூத்துக்குடி மாவட்டத்தில் 31-உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 31-உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மின்சார இணைப்பு மாவட்டத்தில் 90-சதவீதம் வழங்கப்பட்டுள்ளது இரண்டு மூன்று நாட்களில் தூத்துக்குடி முழுமையான இயல்பு வாழ்க்கை திரும்பும்.தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பில் ஆடு,மாடு,கன்று,கோழி,பன்றி,போன்ற உயிரிழப்புகளுக்கு  இதுவரை எடுக்கப்பட்டுள்ள கணகெடுப்புபடி 188-கோடி ரூபாய் தேவை.200-ஆண்டுகள் இல்லாத அளவு மழை தூத்துக்குடி மாவட்டத்தில் செய்துள்ளது.நாங்கள் களத்தில் இறங்கி பார்வையிட்டு கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றோம், மற்றவர்களை போல் டிவி-யில் பார்த்து தெரிந்து கொண்டேன் என்று சொல்லவில்லை.நாளை ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிடுகின்றார். அவர்களே பார்த்து மத்திய அரசிடம் சொல்லட்டும்.என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.

 

Tags : தூத்துக்குடி மாவட்டத்தில் 31-உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

Share via