கடும் பனிமூட்டத்தால் கோர விபத்து... 10 பேர் பலி

by Staff / 29-12-2023 12:58:55pm
கடும் பனிமூட்டத்தால் கோர விபத்து... 10 பேர் பலி

துருக்கியில் பயங்கர சாலை விபத்து நடந்துள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக 7 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 57 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் மேலும் 7 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இஸ்தான்புல்லில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சகரியா மாகாணத்தில் வடக்கு மர்மரா நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.

 

Tags :

Share via