4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டு சிறை

by Editor / 29-03-2022 08:39:31pm
4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 10 ஆண்டு சிறை

சிவகங்கை மாவட்டம், பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் குமார்(எ)ராக்கப்பன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தயார் சிவகங்கை அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கு சிவகங்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. குமார் மீதான குற்றம்  நிறுபிக்கப்படவே அவருக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் 10 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். தீர்ப்புக்குப்பின்னர் சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்ட குற்றவாளி தனது கம்பீரத்தை காட்டும் வண்ணம் மீசையை முறுக்கியவாறு கெத்தாக  சென்றது காண்போரை முகம்சுளிக்க செய்தது.

 

Tags : Man jailed for 10 years for sexually harassing 4-year-old girl

Share via