இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சித்தவநாயக்கன்பட்டி அரசு மதுபான கடை அருகே கடந்த 30-12-2033 சனிக்கிழமை இரவு, விளாத்திகுளம் காமராஜர் நகர் பகுதியில் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ஆறுமுகம் (35) என்பவரை சில மர்ம நபர்கள் கத்தியால் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை அடுத்து ஆறுமுகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த விளாத்திகுளம் ஆய்வாளர் வெங்கடேசபெருமாள், குற்றவாளிகளான விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(26), செல்வகுமார்(21), முத்துமாரியப்பன்(24), ஜெயக்குமார் (23), ஆகிய நான்கு பேரும் சேர்ந்து முன்விரோதம் காரணமாக ஆறுமுகத்தை கத்தியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து செல்வகுமார், முத்துமாரியப்பன், ஜெயக்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் சிறையில்அடைத்தனர். தப்பி ஓடிய செந்தில்குமாரை விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.
Tags :