நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்.- வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

by Staff / 02-01-2024 03:15:42pm
நீட் விலக்கு கையெழுத்து இயக்கம்.- வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி

'நீட் விலக்கு நமது இலக்கு' என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழக முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் கடந்த அக்டோபா் மாதம் தொடங்கிவைத்தார். தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்துக்கள் 50 நாட்களில் பெறப்பட்டுள்ளது. இதனை விரைவில் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்திற்கு எதிரான வழக்கு உயர்நீதிமன்றத்தில்  தொடரப்பட்டது.. அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இவ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..

 

Tags :

Share via