தமிழ்நாடு முதலமைச்சர் உரை

by Admin / 02-01-2024 11:40:28pm
தமிழ்நாடு முதலமைச்சர் உரை

மாண்புமிகு இந்திய பிரதமா் அவா்களே! மாண்புமிகு ஆளுநர் ரவி அவர்களே ! மாண்புமிகு ஒன்றிய இணைய அமைச்சர் எல் முருகன் அவர்களே! தமிழகத்தின் அமைச்சர் பெருமக்கள் -நாடாளுமன்ற உறுப்பினர்- மதிப்பிற்குரிய திருநாவுக்கரசர் அவர்களே! நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களே! மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதி , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்களே! வெள்ளம் போல் திரண்டு இருக்கக்கூடிய தமிழ் உடன்பிறப்புகளே! பத்திரிக்கை மற்றும் ஊடக துறையை சார்ந்து இருக்கக்கூடிய நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். தொட்டதுறை அனைத்திலும் சிகரத்தை தொட்ட மாநிலமான தமிழ்நாடு இந்திய திருநாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்காற்றி வருகிறது .அப்படிப்பட்ட நம்முடைய தமிழ்நாட்டின் இதய பகுதியாக இருக்கிற திருச்சிராப்பள்ளியின் பன்னாட்டு விமான நிலையத்தில் 112 கோடி செலவில் அமைக்கப்பட்டிருக்கும் புதிய முனைத்த மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் திறந்து வைத்து சிறப்பித்திருக்கிறார். தமிழ்நாடு முதலமைச்சர் என்ற வகையில் தமிழ்நாட்டு மக்கள் சார்பாக அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.அதே போல் இந்த துறையினுடைய மாண்புமிகு அமைச்சர் ஜோதி ராஜ சிந்தியா அவர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். திருச்சிராப்பள்ளி பன்னாட்டு விமான நிலையம் தமிழ்நாட்டோட இரண்டாவது பெரிய பன்னாட்டு விமான நிலையம். இதை, மேலும் தமிழ்நாடு அரசு 318 கோடி 85 லட்ச ரூபாய் செலவில் 294.57 ஏக்கர் நிலை எடுப்பு செய்து இந்திய விமான நிலையத்துக்கு வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது .மேலும் திருச்சி உட்பட சென்னை, கோயம்புத்தூர் ,மதுரை, வேலூர், தூத்துக்குடிவிமான நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனமாக 3 ஆயிரத்து 118 கோடி ரூபாய் செலவில் 2,32.4 ஏக்கர் அரசு மற்றும் பட்டா நிலங்களை இந்திய விமான நிலையத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த விரிவாக்க பணிகளை விரைந்து முடிச்சு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். தென் தமிழ்நாட்டில் ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களுக்கு இந்தியாவோட பல்வேறு பகுதியில் இருந்தும் மக்கள் ஆன்மீகப் பயணமாக வராங்க. பல நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும் வந்து போறாங்க. அவங்க  வந்து போறதுக்கு மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையம் அறிவிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே வச்ச கோரிக்கையை மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் கனிவோடு பரிசளிக்க வேண்டுகிறேன் .மலேசியா மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் வர்த்தக தொடர்புக்கு அதை கருத்தினை கொண்டு சென்னை பினாங்கு சென்னை டோக்கியோ இடையே நேரடி விமான சேவையை முன்னுரிமை அடிப்படையில் ஒன்றிய அரசினுடைய பங்களிப்பை விரைந்து வழங்க பிரதமர் அவர்களை கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நெடுஞ்சாலை துறையை பொறுத்த வரை தமிழ்நாட்டில் இப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் விரைவு படுத்த வேண்டும். அடுத்து திருச்சி மாவட்ட எம். எஸ். எம். இகளுக்கு
 பெல் நிறுவனம் மீண்டும் அதிகப்படியான கேட்பாணைகளை இவர்களுக்கு வழங்க ஆவணம் செய்யப்பட வேண்டும் என்று மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களை நான் கேட்டுக் கொள்கிறேன். கடந்த மாசம் சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் கடுமையான மழை பதிவை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் காரணமா அந்த மாவட்டங்களில் பொது உட்கட்ட அமைப்புகள் பெருத்த சேதமடைந்திருக்கு. மக்கள் வாழ்வாதாரமும் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கு .எனவே, அவற்றை கடுமையான இயற்கை பேரிடர் என அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழ்நாட்டுக்கு உரிய நிவாரண நிதியை வழங்க தமிழ்நாடு மக்கள் சார்பாக மீண்டும் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து கோரிக்கையாக வைக்கிறோம் என்று எண்ண வேண்டாம். பரந்து விரிந்த இந்திய திருநாட்டில் கோடிக்கணக்கான மக்களுக்கு நெருக்கமாக இருந்து கல்வி ,மருத்துவம் அவசிய தேவைகள் ,உதவிகள் முக்கிய கடமை. மாநில அரசுகளுக்கு தான் இருக்கு. அதைஅரசியல் ஆக்கலை. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் கோரிக்கைகளை மாண்புமிகு பிரதமர் அவர்கள் நிச்சயமாக நிறைவேற்றி தருவார் என நான் நம்புகிறேன்.

 

Tags :

Share via