ஸ்டெர்லைட் வழக்கை கண்காணிக்க வேண்டும்: வைகோ
ஸ்டெர்லைட் வழக்கை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.ஆலை மூடப்பட்டதை எதிர்த்த வழக்கு ஜன. 22ஆம் தேதி விசாரணைக்கு வருவதை சுட்டிக்காட்டிய அவர், மூத்த வழக்கறிஞர்களை கொண்டு தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முடியாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
Tags :