இருவிரல் பரிசோதனை.. அமைச்சர் கண்டனம்
சிதம்பரத்தில் குழந்தை திருமண விவகாரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. இரு விரல் பரிசோதனை நடக்கவில்லை எனக் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்தபின் பரிசோதனை நடந்ததாக கூறினார் எனவும் தெரிவித்துள்ளார்.
Tags :