கழுத்தில் கத்தியுடன் 2ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்

by Staff / 12-01-2024 02:59:46pm
கழுத்தில் கத்தியுடன் 2ஆம் வகுப்பு மாணவன் மர்ம மரணம்

தூத்துக்குடி மாவட்டம் வேம்பாரில் முத்துக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் அஸ்வின் குமார். இவர் அதே பகுதியில் உள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் காய்ச்சல் காரணமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனையடுத்து வேலை முடித்துவிட்டு வந்து பெற்றோர்கள் வந்து பார்த்தபோது கழுத்தில் கத்தி குத்தப்பட்டு சடலமாக கிடந்தார். இதனையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சிறுவனை கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via