மனைவியை 19 முறை கத்தியால் குத்திய கணவன்
மனைவியை 19 முறை சரமாரியாக கணவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள ஹசன்கஞ்ச் பகுதியில் ஜனவரி 7ம் தேதி இந்த கொடூரம் நடந்தது. பிரிஜ் மோகன் என்பவர் தனது மனைவி சுமனுடன் தகராறு செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த, பிரிஜ் மோகன் தனது மனைவியை 19 முறை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். பலத்த காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரிஜ் மோகனை போலீசார் கைது செய்தனர்.
Tags :