மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது - தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Staff / 14-01-2024 02:52:04pm
மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்குகிறது -  தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்

 

""பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் தாய் தமிழ் நாட்டு மக்கள் எல்லோருக்கும் என் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆண்டுக்கு ஒரு நாள் அருமை மிகு திருநாள் பொங்கல் புதுநாள் நமக்கென்று உள்ள ஒரு ஒப்பற்ற விழா இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா அவர்கள்.

களம் காண்பான் வீரன் என்றால் நெல் களம் காண்பான் உழவன் மகன்.

 போர் மீது செல்லுதலே வீரன் வேலை வைக்கோல் போர் மீது உறங்குதலே உழவன் வேலை..

 பகைவர் முடிவரித்தல் வீரன் நோக்கம் நாற்று முடிவறித்தல் உழவன் நோக்கம்.

 உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு வேற்றுமையோ ஒன்றே ஒன்று உழவன் வாழவைப்பான் வீரன் சாக வைப்பான் என்று எழுதினார். முத்தமிழ் அறிஞர் கலைஞர்

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர் .இது வள்ளுவர் வாக்கு .உழவு என்பது தமிழர்களின் தொழிலாக மட்டும் அல்ல. பண்பாட்டு மரபு. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவை கொண்டாடிட்டு இருக்கிறோம். தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெருநாளாக கொண்டாடிட்டு இருக்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனி பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாளை என்று சொல்லத்தக்க வகையில் நம்மிடத்தில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது.

 தேர்தலுக்கு முன்பு கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றியும் சொல்லாத பல திட்டங்களை செய்து காட்டியும் சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. விடியல் பயணம் முதல் கொரோனா காலத்தில் அனைத்து குடும்பத்திற்கும் நாலாயிரம் ரூபாய் வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய் கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கள் ஆயிரம் ரூபாய் எல்லாவற்றிற்கும் ஒத்தாய்ப்பாக செப்டம்பர் மாதம் முதல் ஒரு கோடிக்கும் மேல் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்.. பெரும் நிதி நெருக்கடிக்கு இடையில் பொங்கல் தொகுப்புடன் பரிசுத்தொகையாய் ஆயிரம் ரூபாய் வழங்கி கொடைக்கான மக்கள் மனதில் மகிழ்ச்சியை பொங்க வைத்துள்ளது .நம்முடைய அரசு பால் வங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன்.

 ஊரே பொங்கட்டும் ! இனிய பொங்கல். இந்தியாவின் பொங்கலாக மாறப்போகும் ஆண்டு இது. அனைவருக்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள் .பொங்கலோ, பொங்கல், பொங்கலோ,  என்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தன்னுடைய பொங்கல் திருநாள் வாழ்த்துக்களில் தெரிவித்துள்ளார்

 

 

Tags :

Share via