சென்னைக்கு வரும் பிரதமர்: பலத்த பாதுகாப்பு..

by Staff / 17-01-2024 03:25:34pm
சென்னைக்கு வரும் பிரதமர்: பலத்த பாதுகாப்பு..

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நாளை மறுதினம் நடக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி சென்று, பிரதமரை நேரில் சந்தித்து, அழைப்பிதழை வழங்கினார். இதையடுத்து பிரதமர் மோடி, தனி விமானத்தில் நாளை மறுதினம் சென்னை வருகிறார். சென்னை நேரு விளையாட்டு அரங்கில், கேலோ விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். பின்னர் கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கி விட்டு, மறுநாள் டெல்லி செல்கிறார். முன்னதாக அவர் ராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் கோயிலுக்கும் செல்வதாக கூறப்படுகிறது. பிரதமரின் இரண்டு நாள் பயணத்தை ஒட்டி, சிறப்பு பாதுகாப்பு படையைச் சேர்ந்த எஸ்பிஜி, ஐஜி லவ்குமார் தலைமையில், சுமார் 20 பாதுகாப்பு படை அதிகாரிகள், நேற்று மதியம், ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனர். சென்னை பழைய விமான நிலையத்தில், எஸ்பிஜி, ஐஜி லவ்குமார் தலைமையில், சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் விமான நிலைய உயர் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via