ஜார்க்கண்ட்டில் ரயில் மோதி 4 பேர் பலி

by Staff / 19-01-2024 11:48:07am
ஜார்க்கண்ட்டில் ரயில் மோதி 4 பேர் பலி

ஜார்க்கண்ட் மாநிலம் செரைகேலா - கார்ஸ்வான் மாவட்டத்தில் கமாரியா ரயில் நிலையம் உள்ளது. இந்த நிலையில், இந்த ரயில் நிலையத்தின் அருகே நேற்று (ஜன. 18) மாலை ஒடிசா மாநிலம் பூரி செல்லும் உத்கல் எக்ஸ்பிரஸ் மோதியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்த காவல் துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு துறையினர் (RPF) சம்பவ இடத்திற்கு விரைந்து 4 பேரது உடலையும் மீட்டனர். இந்த விபத்தால் சில ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.

 

Tags :

Share via