தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டு-உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்...

by Admin / 21-01-2024 10:46:24am
தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டு-உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்...

சேலத்தில் நடந்து வரும் தி.மு.க. இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாட்டில் நேற்று இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தீபத்தை ஏற்றி வைத்து தீபத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சரான மு. க. ஸ்டாலிடம் வழங்கினார். நிகழ்வை தொடர்ந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட ட்ரோன்கள் வழியாக மாநாட்டிற்கான நிகழ்வை  காட்சிப்படுத்தி மாநாட்டினுடைய சிறப்பை வெளிப்படுத்தினர் .ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன்  அதிசய காட்சியை முதலமைச்சர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கண்டு களித்தனர். மாநாட்டின் ஒரு புறம் 10 லட்சத்திற்கு மேற்பட்ட தொண்டர்களின்  வருகையை ஒட்டி மட்டன் பிரியாணி, பிரட் அல்வா, தயிர் சாதம் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் தயார் ஆவதற்கான பணிகளை திருச்சியை சேர்ந்த சமையல் கலைஞர்கள் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மாநாட்டிற்கு வருகிறவர்களுக்கு பார்சலாக மட்டன் பிரியாணி வழங்கப்பட உள்ளது. மாநாடு முடிந்து செல்பவர்களுக்கும் கையிலே பார்சல் வழங்கப்பட உள்ளது.. இன்று காலை திமுகவின்  பாராளுமன்ற உறுப்பினரும் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி மாநாட்டு கொடியை ஏற்றினார்.. வரவேற்பு உரையை ஜோயல் இளைஞர் அணி துணை அமைப்பாளர் நிகழ்த்தினார் .அவரை தொடர்ந்து விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர்- இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மாநாட்டு தீர்மானங்களை வாசித்துக் கொண்டிருக்கிறார்...

 

Tags :

Share via