கடையநல்லூர் திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல் கந்தூரி விழாவில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்

by Editor / 24-01-2024 11:56:56pm
கடையநல்லூர் திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல் கந்தூரி விழாவில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்

கடையநல்லூர் நகர திமுகவில் உச்சகட்ட  கோஷ்டி பூசல் கந்தூரி விழாவில் திமுகவில் கோஷ்டி மோதல் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர் பள்ளிவாசல் கந்தூரி விழாவில் அரசியல்வாதிகள்  கலந்துகொண்டு பள்ளிவாசல் முன்பு சண்டையிட்டது அநாகரிக செயல் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு

கடையநல்லூரில் நகரில் உள்ள பிரபலமான பெரிய பள்ளிவாசல் தர்கா உள்ளது அந்தப் பள்ளிவாசலில் கந்தூரி விழா  கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது இரண்டாவது நாள் தீப உற்சவம் விழா நடைபெற்றது இந்த விழாவில் அரசியல் கட்சித்  தலைவர்கள் வருகை தந்து பள்ளிவாசலுக்குள் சென்று வழிபாடு செய்து விட்டு வருவது வழக்கம் அந்த அடிப்படையில் இன்றைய தினம் திமுக சார்பில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை கடையநல்லூர் நகராட்சி சேர்மன் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான் உட்பட ஏராளமானோர் வருகை தந்தனர் இவர்களை வரவேற்பதற்காக கடையநல்லூர் நகர செயலாளர் அப்பாஸ் பள்ளிவாசல் முன்பாக தன்னுடைய ஆதரவாளருடன் நின்ற பொழுது திமுகவைச் சேர்ந்த சிலர் நகர செயலாளர் அப்பாஸிடம்  தலைமை கழகத்தால் தீபாவளி பொங்கல் பண்டிகை என்பது பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பணத்தை ஏன் வழங்கவில்லை எனக் கூறி நகரச் செயலாளர் அப்பாஸிடம் கேட்ட பொழுது ஒருவருக்கொருவர் அடிதடியில் ஈடுபட்டனர் கடையநல்லூரில் திமுக நகர நகர கழகம் நான்கு கோஷ்டிகளாக செயல்பட்டு வரும் சூழலில்  அதில் உச்சகட்டமாக முஸ்லிம்கள் கொண்டாடும் கந்தூரி விழாவில் பள்ளிவாசல் முன்பு அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக் கொண்டது அநாகரிக செயல் என இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்

கடையநல்லூர் திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல் கந்தூரி விழாவில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்
 

Tags : கடையநல்லூர் திமுகவில் உச்சகட்ட கோஷ்டி பூசல்

Share via