புழல், பாளையங்கோட்டை சிறையில் போலீஸ் சோதனை

by Editor / 06-08-2021 09:08:02am
புழல், பாளையங்கோட்டை சிறையில் போலீஸ்  சோதனை

புழல் சிறை மற்றும் பாளையங்கோட்டை சிறையில் காலையில் போலீஸ் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புழல் மத்திய சிறையில் மாதவரம் துணை ஆணையர் சுந்தரவதனம் தலைமையில் 100 போலீஸ் சோதனை நடத்துகின்றனர். சிறைக்குள் கைதிகள் செல்போன், கஞ்சா, ஆயுதங்கள் வைத்துள்ளாரா என்று ஆய்வு நடத்துகின்றனர். பாளையங்கோட்டை சிறையில் உதவி ஆணையர்கள் விஜயகுமார், சேகர் தலைமையில் 45 போலீசார் சோதனை நடத்துகின்றனர். 

 

Tags :

Share via