15 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.

by Staff / 03-02-2024 06:08:13pm
15 கிலோ கஞ்சாவுடன் 3 பேர் கைது.

மதுரை மாவட்டத்தில் போதை பொருள் தடுப்பு சம்பந்தமாக உசிலம்பட்டி உட்கோட்டம் உத்தப்ப நாயக்கனூர் காவல் நிலைய சரகத்தில் மணிகண்டன், சிறப்பு சார்பு ஆய்வாளர் மற்றும் போலீசாருடன் வத்தலகுண்டு, உசிலம்பட்டி ரோடு முண்டிகுண்டு பிரிவு அருகே ரோந்து செய்து வந்தபோது அங்கே சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு நான்கு சக்கர வாகனத்தை தணிக்கை செய்த போது, அந்த வாகனத்தில் கொண்டு வரப்பட்ட அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா சுமார் 10 கிலோ மற்றும் பணம் ரூபாய் 47000/- ஆகியவற்றை கைப்பற்றி கஞ்சா கடத்தி வந்த இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

அதேபோன்று ஊமச்சிகுளம் உட்கோட்டம், சிலைமான் காவல் நிலைய சரகம் ஆண்டார்கொட்டாரம் அருகே இரணியகுமார் சார்பு ஆய்வாளர் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது , சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை விசாரணை செய்த போது அவரிடமிருந்த சுமார் 5 கிலோ 300 கிராம் கஞ்சாவையும் மேற்படி கஞ்சா கடத்தி வந்த நபரையும் போலீசார் கைது செய்தனர். மேற்படி கஞ்சா, பணம் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுத்தனர்.

 

Tags :

Share via