வெப் சீரிஸ் பார்த்து கள்ளநோட்டு தயாரிப்பு

by Staff / 04-02-2024 02:23:37pm
வெப் சீரிஸ் பார்த்து கள்ளநோட்டு தயாரிப்பு

தெலங்கானா காவல்துறை நேற்று கள்ள நோட்டு புழக்க மோசடி செய்த இருவரை கைது செய்துள்ளனர். இது குறித்து அல்லாப்பூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆஞ்சநேயுலு கூறுகையில், "முதன்மை குற்றவாளி லட்சுமிநாராயணன். அவரிடம் இருந்து 810 போலி 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்துள்ளோம். பாலிவுட்டில் வெளியான பர்ஸி இணைய தொடரை பார்த்து அதன் மூலம் ஈர்க்கப்பட்டு, போலி நோட்டுகளை அச்சடித்து சந்தையில் புழக்கத்தில் விட முடிவு செய்துள்ளார். அவரது நண்பர் பிரனய் ஒரு சில நாட்களுக்கு முன் ரூ.3,00,000 மதிப்புள்ள போலி நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via