டெலிவரி பாய் கடத்தல்..
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் உணவு டெலிவரி செய்யும் சிறுவன் மர்ம நபரால் கடத்தப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் பர்ரா-6 பகுதியில் உணவு விநியோகம் செய்யும் சிறுவனை சில மர்மநபர்கள் காரில் வலுக்கட்டாயமாக கடத்தி சென்றனர். இந்நிலையில், அருகில் இருந்தவர்கள் அந்த இளைஞரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் கார் அதி வேகமாக சென்றதால் அவரை காப்பாற்ற முடியவில்லை. இச்சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :