கர்நாடகாவில் பரவிவரும் குரங்கு காய்ச்சல்

by Staff / 04-02-2024 02:16:51pm
கர்நாடகாவில் பரவிவரும் குரங்கு காய்ச்சல்

கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் 31 குரங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர்களில், 12 நோயாளிகள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் காய்ச்சல் பாதிக்க்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் தீவிரமான பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்றும் கூறியுள்ளனர்.

 

Tags :

Share via