மீனவர்கள் கைது: ராமதாஸ் கண்டம்

by Staff / 09-02-2024 01:47:21pm
மீனவர்கள் கைது: ராமதாஸ் கண்டம்

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட பதிவு: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 19 பேரை அவர்களின் இரு விசைப்படகுகளுடன் சிங்கள படை கைது செய்திருக்கிறது. இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை சிங்கள படை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் கைது செய்யப்பட்டனர். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், கைது நடவடிக்கைகள் குறித்த வழக்கை சில நாட்களுக்கு முன் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் எடுக்காதது ஏன் என்று வினா எழுப்பியிருந்தது. இதற்கு பிறகாவது நிரந்தர தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசுடன் ஒன்றிய அரசு பேச்சு நடத்த வேண்டும். கைதான அனைத்து மீனவர்களையும், அனைத்து படகுகளையும் மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via